ARTICLE AD BOX

சென்னை: சமூகநலத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பெண் அதிகாரியின் ரூ.1.5 கோடி மதிப்புடைய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக திரையரங்க உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூகநலத் துறையில் இணை இயக்குநராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர் மேரி வர்க்கீஸ் (65). கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் சென்னை மாதவரத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கொளத்தூரில் ரூ.1.5 கோடி மதிப்புடைய நிலம் இருந்தது. இதை சிலர் போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் அபகரித்துள்ளனர்.

2 months ago
4







English (US) ·