ARTICLE AD BOX

சென்னை: மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றபோது தப்பிய ரவுடியை போலீஸார் மீண்டும் கைது செய்துள்ளனர். சென்னை ராயப்பேட்டை பி.எம். தர்கா பகுதியை சேர்ந்தவர் ரவுடி அண்டா சீனு (27).
இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்ற வழக்கு ஒன்றில் ரவுடி சீனு காவல் நிலையத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். அவரை கடந்த வெள்ளிக்கிழமை ராயப்பேட்டை போலீஸார் கைது செய்தனர்.

9 months ago
9







English (US) ·