சென்னை | மது போதையில் கணவரை கொலை செய்த மனைவி கைது

3 months ago 4
ARTICLE AD BOX

சென்னை: மது போதை​யில் கணவரை கத்​தியால் குத்தி கொலை செய்த மனை​வியை போலீ​ஸார் கைது செய்து விசா​ரிக்​கின்​றனர். ஒடி​சாவைச் சேர்ந்​தவர் பிரகலாத் சர்​தார் (42). இவரது முதல் மனைவி இறந்​து ​விட்​ட​தால் மேற்கு வங்​கத்​தைச்சேர்ந்த பிங்கி (36) என்ற பெண்ணை 2-வ​தாக திருமணம் செய்து கொண்​டார். இந்த தம்​பதி சென்னை சைதாப்​பேட்​டை, ஜோன்ஸ் சாலை​யில் தங்கி கட்​டிட வேலை செய்து வந்​தனர். இந்​நிலையில் நேற்று முன்​தினம் இரவு பிரகலாத், மனைவி பிங்​கி​யுடன்மது அருந்​தி​ய​தாக கூறப்​படு​கிறது.

மது போதை​யில், மனை​வி​யின் நடத்தை தொடர்​பான பேச்சு எழுந்து கணவன் - மனைவி இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்டு கைகலப்​பாக மாறியது. ஆத்​திரமடைந்த பிரகலாத் மனைவி பிங்​கி​யின் கழுத்தை நெரித்​து, கொலை செய்​து​விடு​வேன் என மிரட்​டி​யுள்​ளார். இதனால் மிகுந்த கோபம் அடைந்த பிங்​கி,கணவரை கீழே தள்ளி அரு​கி​லிருந்த காய்​கறி வெட்​டும் கத்​தியை எடுத்து கணவர் கழுத்​தில் குத்​தி​னார்.

Read Entire Article