ARTICLE AD BOX

சென்னை: சென்னை மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக 23 பேரிடம் ரூ.1.35 கோடி பண மோசடி செய்ததாக போலி மாநகராட்சி அதிகாரிகள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சந்தோஷபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவர் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், சிந்தாதிரிப்பேட்டை ராஜகோபால் தெருவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (42) என்பவரது அறிமுகம் கிடைத்தது. அவர் சென்னை மாநகராட்சியில் உயர் அதிகாரிகள் பலரை தெரியும் என்றும், தான் நினைத்தால் சென்னை மாநகராட்சியில் இன்ஸ்பெக்டர் பணி உள்பட பல்வேறு பணிகளை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார். எனக்கு மாநகராட்சியில் இன்ஸ்பெக்டர் பணி பெற்றுத் தருவதாக கூறினார்.

6 months ago
7







English (US) ·