ARTICLE AD BOX

சென்னை: சூப்பர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் 3 சதவீத லாபம் தருவதாகக் கூறி ரூ.12.50 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்தவர் சண்முகம். மருந்தகம் (மெடிக்கல்) நடத்தி வருகிறார். இவருக்கு 2017-ம் ஆண்டு அண்ணாநகர், ஆர்.வி.நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (52) என்பவரது நட்பு கிடைத்தது.
திருவான்மியூரில் சூப்பர் மார்க்கெட் நடத்துவதற்கு பணம் தேவைப்படுவதாகவும், அதற்கு பணம் கொடுத்தால் வியாபாரத்தில் 3 சதவீதம் லாபம் தருவதாகவும் சதீஷ்குமார் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய சண்முகம் சூப்பர் மார்க்கெட் நடத்த முதல் கட்டமாக ரூ.2.5 லட்சமும், அடுத்ததாக ரூ.10 லட்சமும் கொடுத்துள்ளார்.

3 months ago
5







English (US) ·