சென்னை | முதலீடு செய்தால் 3% லாபம் தருவதாக ரூ.12.50 லட்சம் பெற்று மோசடி செய்தவர் கைது

3 months ago 5
ARTICLE AD BOX

சென்னை: சூப்​பர் மார்க்​கெட்​டில் முதலீடு செய்​தால் 3 சதவீத லாபம் தரு​வ​தாகக் கூறி ரூ.12.50 லட்​சம் மோசடி செய்த நபர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். சென்​னையைச் சேர்ந்​தவர் சண்​முகம். மருந்​தகம் (மெடிக்​கல்) நடத்தி வரு​கிறார். இவருக்கு 2017-ம் ஆண்டு அண்​ணாநகர், ஆர்​.​வி.நகரைச் சேர்ந்த சதீஷ்கு​மார் (52) என்​பவரது நட்பு கிடைத்​தது.

திரு​வான்​மியூரில் சூப்​பர் மார்க்​கெட் நடத்​து​வதற்கு பணம் தேவைப்​படு​வ​தாக​வும், அதற்கு பணம் கொடுத்​தால் வியா​பாரத்​தில் 3 சதவீதம் லாபம் தரு​வ​தாக​வும் சதீஷ்கு​மார் ஆசை வார்த்தை கூறி​யுள்​ளார். இதை உண்மை என நம்​பிய சண்​முகம் சூப்​பர் மார்க்​கெட் நடத்த முதல் கட்​ட​மாக ரூ.2.5 லட்​ச​மும், அடுத்​த​தாக ரூ.10 லட்​ச​மும் கொடுத்​துள்​ளார்.

Read Entire Article