சென்னை - மெரினாவில் 28 கிலோ தங்கம் பறிமுதல்: 4 பேரிடம் போலீஸ் விசாரணை

9 months ago 9
ARTICLE AD BOX

சென்னை: மெரினா கடற்கரை பகுதியில் போலீஸாரின் வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 28 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 4 பேரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்கும் வகையில் ரோந்து மற்றும் வாகன சோதனை பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை இரவு மெரினா காமராஜர் சாலையில், அண்ணா சதுக்கம் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் இருந்த 4 பேரிடமும் போலீஸார் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

Read Entire Article