ARTICLE AD BOX

சென்னை: பெருங்குடியில் ரவுடி கொலை வழக்கில் அவரது நண்பர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை வேளச்சேரி பவானி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவரத்தினம்(26). இவர், பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற அப்பு(24) உள்பட மேலும் சிலருடன் நண்பராக பழகி வந்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் ஜீவரத்தினம் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, நண்பரான ரஞ்சித்குமாரின் மனைவி ஜீவரத்தினத்தை அடிக்கடி சிறைக்கு சென்று சந்தித்து வந்துள்ளார். சிறையிலிருந்து வந்த பிறகு இருவருக்கும் நெருக்கமான நட்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

9 months ago
8







English (US) ·