ARTICLE AD BOX

சென்னை: லாட்ஜில் தங்கியிருந்த காதலர்கள் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். சென்னை அண்ணாநகரில் உள்ள மேல்நடுவங்கரை பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் திரிஷா(20). சோழவரம் அருகே உள்ள எடப்பாளையம் அண்ணா தெருவில் வசித்தவர் ராபின்(22). இருவரும் சென்னை அண்ணா நகரில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தனர். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (செப்.8) காலை 11 மணியளவில் வேப்பேரி காவல் நிலையம் பின்புறம், உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ராபின் கோபித்துக் கொண்டு வெளியேறி உள்ளார். அறையில் இருந்த திரிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறிதுநேரம் கழித்து அறைக்குத் திரும்பிய ராபின், காதலி தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

3 months ago
5







English (US) ·