ARTICLE AD BOX

போலி ஆவணங்களைச் சமர்பித்து தனியார் வங்கியில் ரூ.1.04 கோடி மோசடி செய்ததாக ஆந்திராவைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் திவ்யன் குமார் என்பவர் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘தனியார் நிறுவனத்தில் மென் பொருள் பொறியாளர்களாகப் பணிப்புரிவதாகக் கூறி, கேசவ கங்காராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் போலியான ஊதிய சான்றுகளை தயார் செய்து, எங்கள் வங்கியில் சமர்ப்பித்து, தனி நபர் கடன் பெற்று அதை வங்கிக்கு திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி உள்ளனர்.

9 months ago
8







English (US) ·