சென்னை வந்த வந்தே பாரத் ரயிலில் டாக்டர் தவறவிட்ட கைக்கடிகாரம்: 44 நிமிடங்களில் மீட்பு

2 months ago 4
ARTICLE AD BOX

சென்னை: நாகர்கோவில் - சென்னை எழும்பூருக்கு வந்தடைந்த வந்தே பாரத் விரைவு ரயிலில் டாக்டர் ஒருவர் தவறவிட்ட கைக்கடிகாரம் 44 நிமிடங்களில் மீட்கப்பட்டது. தொடர்ந்து, உரியவரிடம் ஒப்படைத்த ஆர்பிஎஃப் போலீஸார் மற்றும் ரயில்வே அதிகாரியை ரயில்வே உயரதிகாரிகள் பாராட்டினர்.

நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்தே பாரத் ரயில் கடந்த 17-ம் தேதி புறப்பட்டது. இந்த ரயிலில் திருச்சிராப்பள்ளியில் இருந்து சென்னை எழும்பூருக்கு டாக்டர் ஜெ.மரியானோ ஆண்டோ ப்ருனோ என்பவர் பயணம் செய்தார். இந்த ரயில் அதேநாள் இரவு 11 மணிக்கு எழும்பூரை வந்தடைந்தது.

Read Entire Article