ARTICLE AD BOX

சென்னை: வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸாரை மது போதையில் தாக்கிய 3 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை காவல் நிலைய போலீஸார் கடந்த 26-ம் தேதி இரவு அதே பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மறுநாள் அதிகாலை அதே பகுதி டி.எச்.ரோடு மற்றும் ரத்தின சபாபதி தெரு சந்திப்பில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை மறித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த கோதண்டராமன் (33) மீது சந்தேகத்தின் பேரில், மது போதையை கண்டறியும் கருவி மூலம் பரிசோதித்தனர்.

9 months ago
8







English (US) ·