ARTICLE AD BOX

சென்னை: சென்னை அபிராமபுரத்தில் வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்ல முயன்றபோது தொழிலதிபர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். போலீஸார் தாக்கியதால் இறந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ஆனந்தி என்பவர் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது: கடந்த 2011-ல் சென்னை அபிராமபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன் (56) என்பவருக்கு சொந்தமாக மாம்பாக்கத்தில் இருந்த ஐஸ் கம்பெனியை வாங்கினேன். அப்போதே, சொத்து ஆவணத்தை அவர் என்னிடம் கொடுத்து விட்டார். கம்பெனியை நடத்த முடியாததால், 2018-ல் அதை வேறொருவருக்கு விற்க முடிவு செய்தேன்.

8 months ago
8







English (US) ·