ARTICLE AD BOX

வளசரவாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் தாக்கி நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் மணி (65). ஓய்வு பெற்ற செவிலியர் பேராசிரியை. இவர், தனது மகள், மருமகனுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், மருந்துகள் டெலிவரி செய்ய வந்துள்ளதாக அவரிடம் கூறியுள்ளார். தனது மகள் ஆன்லைனில் மருந்துகளை ஆர்டர் செய்திருப்பார் என நினைத்து, அந்த நபரை வீட்டினுள் அழைத்துள்ளார்.

9 months ago
8







English (US) ·