சென்னைக்கு ஹெராயின் கடத்தல்: அசாம் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கும்பல் கைது

9 months ago 9
ARTICLE AD BOX

சென்னை: சென்னைக்கு ஹெராயின் கடத்தி வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு ரயில்கள் மூலம் போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்ட்ரல், எழும்பூர் உட்பட சென்னையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீஸார் கண்காணிப்புப் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

அந்த வகையில் எழும்பூர் போலீஸார் கடந்த 3-ம் தேதி இரவு எழும்பூர் வடக்கு ரயில் நிலைய புக்கிங் அலுவலகம் அருகே ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும் வகையில் 3 இளைஞர்கள் அவர்களுக்குள் பேசிக் கொண்டு இருந்தனர். இதைக் கவனித்த போலீஸார் அவர்களிடம் சென்று விசாரித்தனர். அப்போது, 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

Read Entire Article