சென்னையில் தொழில் தொடங்குவதாக கூறி பெண்ணிடம் ரூ.1 கோடி மோடி செய்த 2 பேர் கைது

1 month ago 3
ARTICLE AD BOX

சென்னை: தொழில் தொடங்க பெண்ணிடம் ரூ.1 கோடி கடன் பெற்று மோசடி செய்த உறவின​ர்கள் இருவர் கைது செய்​யப்​பட்​டனர். சென்னை மடிப்​பாக்​கம், ராம் நகரைச் சேர்ந்​தவர் சுகந்தி (57). 2019-ம் ஆண்டு இவரது கணவர் ரமேஷ்கு​மாரின் அக்​கா, பள்​ளிக்​கரணை​யில் வசிக்​கும் சரளாதே​வி, அவரது கணவர் குணசேகர் (67) மற்​றும் இவர்​களது மகன் விஜய் (36) ஆகியோர் விடுதி நடத்​து​வதற்​காக ரூ.1 கோடி கடனாக கேட்​டனர். 2 வருடத்​துக்​குள் அந்த கடனை வட்​டி​யுடன் செலுத்தி விடு​வ​தாக​வும் தெரி​வித்​தனர்.

இதை நம்​பிய சுகந்​தி, தங்​களுக்​குச் சொந்​த​மான திரு​வான்​ மியூரில் உள்ள வீட்டை விற்று அதில் வந்த பணத்​தில் ரூ.1 கோடியை வங்கி மூல​மாக​வும், ரொக்​க​மாக​வும் என சரளாதேவி குடும்​பத்​தினரிடம் கொடுத்​தார். சில மாதங்​கள் மட்​டும் மாத கடனை செலுத்​தி​யுள்​ளனர். பின்​னர் 2020-ம் ஆண்டு கரோனா எனக்​கூறி 2023-ம் ஆண்டு வரை சிறிய தொகை கொடுத்​துள்​ளனர்.

Read Entire Article