சென்னையில் போதை பொருள் கடத்திய 3 பேர் கைது

10 months ago 9
ARTICLE AD BOX

சென்னை: மெத்தம்பெட்டமைன் கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையைத் தடுக்க காவல் ஆணையர் அருண் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவை ஏற்படுத்தி உள்ளார். அப்பிரிவு போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, அப்பிரிவு போலீஸார் நுங்கம்பாக்கம் போலீஸாருடன் ஒருங்கிணைந்து நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலை சந்திப்பில் கண்காணித்தனர்.

அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதித்தபோது அதில், மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது.

Read Entire Article