ARTICLE AD BOX

சென்னை/தூத்துக்குடி: சென்னையில் வைர வியாபாரியை தாக்கி கட்டிப்போட்டுவிட்டு அவரிடமிருந்து ரூ.23 கோடி மதிப்புடைய வைர கற்களை கொள்ளையடித்து தப்பிய 4 பேர் கும்பல் தூத்துக்குடியில் பிடிபட்டனர்.
சென்னை அண்ணா நகர், 17-வது தெருவில் வசித்து வருபவர் வைர வியாபாரி சந்திரசேகர்(69). இவருக்கு இடைத்தரகரான வளசரவாக்கம் காமாட்சி நகரைச் சேர்ந்த விஜய் (24) என்பவரது அறிமுகம் கிடைத்தது. 2 நாட்களுக்கு முன்னர் விஜயை தொடர்பு கொண்ட சந்திரசேகர் தன்னிடம் ரூ.23 கோடி மதிப்புடைய பழமையான வைர கற்கள் உள்ளது. அதை வாங்க யாரேனும் இருந்தால் தெரிவிக்கவும் என கூறியுள்ளார். சிறிது நேரத்தில், 'நகைகளை வாங்க ஒருவர் தயாராக உள்ளார். அவர் நகைகளை நேரில் பார்த்தால்தான் வாங்குவேன் என தெரிவிக்கிறார். வீட்டுக்கு நேரில் அழைத்து வரவா?' என கேட்டுள்ளார்.

7 months ago
8







English (US) ·