ARTICLE AD BOX

சென்னை: திரிபுராவிலிருந்து ஹெராயின் கடத்தி வந்து, சென்னையில் சினிமா துறையினர், ஐடி இளைஞர்கள் உள்ளிட்டோரை குறிவைத்து விற்பனையில் ஈடுபட்ட திரிபுராவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தரமணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று தரமணி, தபால் நிலையம் எதிரில் கண்காணித்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 நபர்களை விசாரணை செய்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

3 months ago
4







English (US) ·