ARTICLE AD BOX

செய்யாறு: செய்யாறு அருகே தந்தையின் கொலைக்குப் பழிக்குப்பழியாக ஆட்டோ ஓட்டுநரைக் கடத்திச் சென்று கொலை செய்த மகன் உள்ளிட்ட நான்கு பேரைக் காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தந்தை கொலை செய்யப்பட்ட இடத் திலேயே ஆட்டோ ஓட்டுநரின் உடலை மூட்டை கட்டி வீசி மகன் பழிதீர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் (35) என் பவரைக் கொலை செய்து அவரது உடலை அங்குள்ள டாஸ்மாக் மதுபான கடை அருகேயுள்ள பங்க் கடையின் முன்பாக மூட்டை கட்டி வீசியுள்ளதாகக் கூறி பிரம்ம தேசம் காவல் நிலையத்தில் நேற்று காலை 4 பேர் சரணடைந்தனர்.

7 months ago
8







English (US) ·