ARTICLE AD BOX

சேலம்: சேலத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 321 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, 3 பேரை போலீஸார் கைது செய்தனர். சேலம், நெத்திமேடு பகுதியில் குடோனில் குட்கா பதுக்கி வைத்து, பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதாக செவ்வாய்ப்பேட்டை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, செவ்வாய்ப்பேட்டை காவல் ஆய்வாளர் தேவராஜ் தலைமையிலான போலீஸார் நெத்திமேடு, சந்தைப்பேட்டையில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த காரில் இருந்த மூன்று பேரைப் பிடித்து விசாரணை செய்தனர்.

8 months ago
8







English (US) ·