சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்த முதிய தம்பதியை கொலை செய்து நகைகள் கொள்ளை

7 months ago 8
ARTICLE AD BOX

சேலம்: மளி​கைக் கடை நடத்தி வந்த முதிய தம்​ப​தி​யைக் கொன்​று, நகைகளைக் கொள்​ளை​யடித்​துச் சென்ற கும்​பலை சேலம் போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். சேலம் சூரமங்​கலத்தை அடுத்த ஜாகீர் அம்​மா​பாளை​யம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் பாஸ்​கரன் (65). இவர், தனது வீட்​டின் ஒரு பகு​தி​யில் மளி​கைக் கடை நடத்தி வந்​தார். இவரது மனைவி வித்யா (60).

இந்​நிலை​யில் நேற்று மதி​யம் பாஸ்​கரனும், வித்​யா​வும் வீட்​டில் ரத்த வெள்​ளத்​தில் கிடந்​தனர். இதைக் கண்ட அப்​பகுதி மக்​கள் அதிர்ச்​சி​யடைந்​து, போலீ​ஸாருக்​குத் தகவல் தெரி​வித்​தனர். போலீ​ஸார் அங்கு சென்று பார்த்​த​போது, வித்யா உயி​ரிழந்து கிடந்​தார். பலத்த காயத்​துடன் இருந்த பாஸ்​கரனை போலீ​ஸார் மீட்​டு, சேலம் அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். ஆனால், வழி​யிலேயே அவர் உயி​ரிழந்​தார். முதல் கட்ட விசாரணையில் இரு​வரும் கொலை செய்​யப்​பட்​டது தெரிய​வந்​தது.

Read Entire Article