சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி வெட்டிக் கொலை: சித்தோடு போலீஸார் விசாரணை

9 months ago 8
ARTICLE AD BOX

ஈரோடு: ஈரோடு நசியனூர் வழியாக திருப்பூர் நோக்கி காரில் சென்ற சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் கிச்சிபாளையம் எஸ்எம்சி காலனியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜான் (எ) சாணக்யா (35). இவருக்கு சரண்யா என்ற மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். ஜான் மீது சேலம் கிச்சிபாளையம், அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இச்சூழலில் ஜான் தனது குடும்பத்தினருடன் திருப்பூர் மாவட்டம் பெரியபாளையத்தில் வசித்து வந்தார். தவிர, நிதி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார்.

Read Entire Article