ARTICLE AD BOX

சேலம்: சங்ககிரி அருகே 2 மூதாட்டிகளை கொலை செய்த தொழிலாளியை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள இடங்கணசாலை தூதனூர் பகுதியில் கடந்த 4-ம் தேதி கல்குவாரி குட்டை நீரில் 2 மூதாட்டிகள் இறந்து கிடந்தனர்.
விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பாவாயி (70) மற்றும் பெரியம்மாள் (75) என்பது தெரியவந்தது. அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி அய்யனார் (55) பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை காரணமாக மூதாட்டிகளை கொன்று, அவர்கள் அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டு, இருவரது சடலத்தையும் கல்குவாரி குட்டையில் வீசியது தெரியவந்தது.

1 month ago
3







English (US) ·