ARTICLE AD BOX

சேலம்: சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்த முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பிஹார் மாநில தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் சூரமங்கலத்தை அடுத்த ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் ( 65 ). இவர், தனது வீட்டின் ஒரு பகுதியில் சிறிய மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி வித்யா (60). வீட்டின் மாடியில் அவரது மகன் வசித்து வந்தார். இந்நிலையில் பாஸ்கரனும் அவரது மனைவி வித்யாவும் நேற்று மாலை வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், இருவரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால், சிறிது நேரத்தில் வித்யா உயிரிழந்துவிட்டார்.

7 months ago
8







English (US) ·