சைபர் குற்ற கும்பல்களிடமிருந்து ஒரே மாதத்தில் ரூ.1.62 கோடியை மீட்ட சைபர் க்ரைம் போலீஸார்

3 months ago 5
ARTICLE AD BOX

சென்னை: சைபர் குற்ற கும்​பல்​களிட​மிருந்து கடந்த ஒரு மாதத்​தில் ரூ.1.62 கோடியை மீட்ட சென்னை போலீ​ஸார், அதை உரியவர்களிடம் ஒப்​படைத்​துள்​ளனர். ஆன்​லைன் வர்த்​தகம், டிஜிட்​டல் கைது, ஆன்​லைன் பகுதி நேர வேலை, கிரிப்டோ கரன்​சி, வாட்​ஸ்​-அப் ஹேக்​கிங் உட்பட பல்​வேறு வகை​யான மோசடிகள் ஆங்​காங்கே நடை​பெற்று வரு​கின்​றன. இந்த வகை மோசடி மூலம் பொது​மக்​களின் கோடிக்​கணக்​கான பணமும் சுருட்​டப்​படு​கிறது.

சைபர் மோசடியைத் தடுக்​க​வும், பொது​மக்​கள் இழந்த பணத்தை மீட்​க​வும், குற்​ற​வாளி​களைக் கைது செய்​ய​வும் சென்னை காவல் துறை பல்​வேறு தொடர் நடவடிக்​கைகளை மேற்​கொண்​டுள்​ளது. அதன் ஒரு பகு​தி​யாக சென்​னை​யில் உள்ள 12 காவல் மாவட்​டங்​களில் சைபர் க்ரைம் பிரிவு ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இது​போக சென்​னை​யில் உள்ள 4 மண்​டலங்​களி​லும் சைபர் க்ரைம் பிரிவு பிரத்​யேக​மாக செயல்​பட்டு வரு​கிறது.

Read Entire Article