சௌதாமினி: ‘கட்’ சொல்ல மறந்த இயக்குநர், மழையில் நனைந்தபடி இருந்த நடிகை | அரி(றி)ய சினிமா 

8 months ago 7
ARTICLE AD BOX

மேடை நாடகங்களில் பாடகியாகவும் நடிகையாகவும் தனது 13 வயதிலேயே திறமையை நிரூபித்தவர், பி.கண்ணாம்பா. ஆந்திர மாநிலம் ஏலூருவை சேர்ந்த அவர், நாடக சமாஜம் என்ற நாடக மன்றத்தில் சேர்ந்து புராண, சமூக நாடகங்களில் முதன்மை வேடங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். அப்போது நாடக ஒப்பந்தக்காரராக இருந்த கே.பி.நாகபூஷணம், கண்ணாம்பாவைச் சந்தித்தார். நாடகத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இருவரும் 1934-ல் திருமணம் செய்து கொண்டனர்.

பிறகு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி நாட்டிய மண்டலி என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி தென்னிந்தியா முழுவதும் நாடகங்களை நடத்தி வந்தனர். இதன் அடுத்தக்கட்டமாக சினிமாவில் கவனம் செலுத்துவதற்காகச் சென்னை வந்தனர். ஹரிச்சந்திரா (1935) மூலம் சினிமாவில் அறிமுகமானார், பி.கண்ணாம்பா. சில படங்களில் நடித்த பிறகு, இந்த ஜோடி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி நிறுவனம் மூலம் படங்களைத் தயாரிக்கத் தொடங்கியது. தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தனர். அதில் பெரும்பாலான படங்களை நாகபூஷணமே இயக்கினார்.

Read Entire Article