"ஜட்டுவை கொடுத்தது, கடினமான முடிவு தான்; ஆனாலும் ஏன் செய்தோம்?"- விளக்கும் CSK காசி விஸ்வநாதன்

1 month ago 2
ARTICLE AD BOX

ஐ.பி.எல் மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், அணிகள் தங்களின் டிரேடிங் அப்டேட்ஸை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.

அதன்படி, சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணி வாங்கியிருப்பது உறுதியாகியிருக்கிறது.

சென்னை அணியிடமிருந்து 14 கோடி ரூபாய்க்கு ஜடேஜாவையும் 2.4 கோடி ரூபாய்க்கு சாம் கரணையும் வாங்கிவிட்டு 18 கோடிக்கு சாம்சனை ராஜஸ்தான் அணி கொடுத்திருக்கிறது.

சஞ்சு சாம்சன் - ரவீந்திர ஜடேஜாசஞ்சு சாம்சன் - ரவீந்திர ஜடேஜா

இந்நிலையில் சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே வாங்கியது குறித்தும், ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோரை விடுவித்தது குறித்தும் பேசியிருக்கிறார்.

இதுதொடர்பாக பேசியிருக்கும் காசி விஸ்வநாதன் , "சிஎஸ்கே அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவைப்படுகிறது.

ஜட்டுவை (ஜடேஜா) சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிப்பது ஒரு கடினமான முடிவுதான். சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு அவரும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.

ஆனால் அணிக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. பரஸ்பர உடன்பாடு அடிப்படையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

நான் ஜடேஜாவிடம் பேசியபோது அவருக்கும் ஒரு பிரேக் தேவைப்படுவது தெரிந்தது.

சாம் கரண் எங்களுடன் 2020-ல் இருந்து பயணித்தார். அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடினார்.

ஜட்டுவையும், சாம் கரணையும் விடுவித்தது நாங்கள் எடுத்த ஒரு கடினமான முடிவுதான்.

அடுத்த சில வருடங்களுக்கு அணியை வலுவாக உருவாக்க வேண்டும் என்பது சிஎஸ்கே நிர்வாகத்திற்கு மிக முக்கியமான ஒன்று.

Ravindra Jadeja | ரவீந்திர ஜடேஜாRavindra Jadeja | ரவீந்திர ஜடேஜா

சஞ்சு சாம்சன் ஐபிஎலில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்தியிருக்கிறார்.

அவருடைய அனுபவம் மற்றும் வயதை வைத்து அவர் சிஎஸ்கே-விற்கு தேவையான ஒரு நபர் என்ற முடிவை எடுத்தோம்.

ஜட்டு மற்றும் சாம் கரணை விடுவித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகத் தான் இருக்கும்.

ஆனால் அணியின் தேவைக்காக தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். வரும் வருடங்களிலும் சிஎஸ்கே எப்போதும் போல சிறப்பாக விளையாடும்" என்று தெரிவித்திருக்கிறார்.

Read Entire Article