ARTICLE AD BOX

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஜன்னல் கம்பிகளை அறுத்து தமிழ்நாடு கிராம வங்கியில் இன்று அதிகாலை கொள்ளை முயற்சி நடந்துள்ளது. வங்கி அலாரம் ஒலித்ததால் கொள்ளையடிக்க வந்தவர்கள் தப்பியோடினர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் தமிழ்நாடு கிராம வங்கி இயங்கி வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஏராளமானோர் தங்க நகைகளையும் அடகு வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் இந்த வங்கியின் பக்கவாட்டில் உள்ள சந்தில் நுழைந்த மர்ம நபர்கள், ஜன்னலில் 3 கம்பிகளை மட்டும் அறுத்து வங்கியின் உள்ளே நுழைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

9 months ago
10







English (US) ·