ARTICLE AD BOX

திருநெல்வேலி: ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் பிஜிலி கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான முகமது தௌஃபிக் (எ) கிருஷ்ணமூர்த்தியை, நெல்லை மாநகர போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர்.
இந்தக் கொலை வழக்கில் தேடப்பட்ட கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர், திருநெல்வேலி 4-வது நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனர். இதைத் தொடர்ந்து முக்கிய நபரான தௌஃபிக் (எ) கிருஷ்ணமூர்த்தியை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், தௌஃபிக் திருநெல்வேலி பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெட்டியாப்பட்டியில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

9 months ago
9







English (US) ·