‘ஜிப்லி’ இலவச செயலிகளில் பல ஆபத்துகள்: சைபர் க்ரைம் எச்சரிக்கை

8 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: அங்கீகாரம் இல்லாத செயலிகளில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஜிப்லி ஆர்வலர்களுக்கு சைபர் க்ரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக காவல் துறையின் சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜிப்லி செயற்கை நுண்ணறிவு கலையின் பயன்பாடு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஜிப்லி கலையில் இருக்கும் ஆபத்து குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. ஜிப்லி வரைகலை புகைப்படங்களை வழங்குவதற்கு இப்போது பல்வேறு செல்போன் செயலிகள் உள்ளன. இவற்றில் அங்கீகாரம் இல்லாத செயலிகளும் உள்ளன.

Read Entire Article