ARTICLE AD BOX

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பங்கேற்றார். 12 நிமிடங்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் 6 கேள்விகள் கேட்கப்பட்டன.
இதில் எந்த இடத்திலும் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் அணியின் பெயரை குறிப்பிடவில்லை. ஆனால் 140 கோடி ரசிகர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பானதாக இருக்கும் என அவர், தெரிவித்தார். இதுதொடர்பாக சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: ஆசிய கோப்பை தொடருக்காக சிறந்த முறையில் தயாரானோம். மூன்று சிறந்த ஆட்டங்களை விளையாடி உள்ளோம். சிறந்த முடிவை பெறுவதற்கு என்ன செய்ய முடியுமோ அதில் கவனம் செலுத்துகிறோம். கடந்த 3 ஆட்டங்களிலும் நாங்கள் செய்துள்ள நல்ல பழக்கங்களை தொடர விரும்புகிறோம்.

3 months ago
5







English (US) ·