டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடருக்கு தகுதி பெற்றார் எலெனா ரைபகினா

2 months ago 4
ARTICLE AD BOX

டோக்​கியோ: ஜப்​பானின் டோக்​கியோ நகரில் பான் பசிபிக் ஓபன் மகளிர் சர்​வ​தேச டென்​னிஸ் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதன் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் கஜகஸ்​தானின் எலெனா ரைபகி​னா, கனடா​வின் விக்​டோரியா எம்​போகோவுடன் மோதி​னார். இதில் ரைபகினா 6-3, 7-6 (4) என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்​னேறி​னார்.

2022-ம் ஆண்டு விம்​பிள்​டன் சாம்​பிய​னான ரைபகி​னா, அரை இறுதி சுற்​றில் செக் குடியரசின் லின்டா நோஸ்​கோ​வாவுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறார். பான் பசிபிக் தொடரில் அரை இறு​திக்கு முன்​னேறியதன் மூலம் உலகத் தரவரிசை​யில் 8-வது இடத்​துக்கு முன்​னேறி அடுத்த மாதம் சவுதி அரேபி​யா​வில் நடை​பெற உள்ள டபிள்​யூடிஏ பைனல்ஸ் தொடரில் கலந்​து​கொள்​வதற்கு கடைசி வீராங்​க​னை​யாக தகுதி பெற்​றுள்​ளார் எலெனா ரைபகினா.

Read Entire Article