ARTICLE AD BOX

டோக்கியோ: ஜப்பானின் டோக்கியோ நகரில் பான் பசிபிக் ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் கஜகஸ்தானின் எலெனா ரைபகினா, கனடாவின் விக்டோரியா எம்போகோவுடன் மோதினார். இதில் ரைபகினா 6-3, 7-6 (4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
2022-ம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியனான ரைபகினா, அரை இறுதி சுற்றில் செக் குடியரசின் லின்டா நோஸ்கோவாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். பான் பசிபிக் தொடரில் அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் உலகத் தரவரிசையில் 8-வது இடத்துக்கு முன்னேறி அடுத்த மாதம் சவுதி அரேபியாவில் நடைபெற உள்ள டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடரில் கலந்துகொள்வதற்கு கடைசி வீராங்கனையாக தகுதி பெற்றுள்ளார் எலெனா ரைபகினா.

2 months ago
4







English (US) ·