டி 20 தொடரில் அபிஷேக் சர்மா சவால் அளிப்பார்: ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷ் கருத்து 

1 month ago 3
ARTICLE AD BOX

கான்​பெரா: 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடரில் இந்​திய அணி​யின் தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா எங்​களுக்கு சவால் கொடுப்​பார் என ஆஸ்​திரேலிய அணி​யின் கேப்​டன் மிட்​செல் மார்ஷ் தெரி​வித்​துள்​ளார்.

இந்​தியா - ஆஸ்​திரேலியா அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரின் முதல் போட்டி கான்​பெ​ரா​வில் உள்ள மனுகா ஓவல் மைதானத்​தில் இன்று நடை​பெறுகிறது. இந்த போட்​டியையொட்டி நேற்று நடை​பெற்ற பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பில் ஆஸ்​திரேலிய அணி​யின் கேப்​டன் மிட்​செல் மார்ஷ் கூறிய​தாவது: கடந்த இரண்டு டி 20 உலகக் கோப்​பைத் தொடர்​கள் ஆஸ்​திரேலிய அணிக்கு சிறப்​பான​தாக அமைய​வில்​லை. அடுத்த ஆண்டு நடை​பெறவுள்ள டி20 உலகக் கோப்​பையை வெல்​லும் அளவுக்கு சவால் மிகுந்த அணி​யாக நாங்​கள் இருக்க வேண்​டும். பேட்​டிங்​கில் நாங்​கள் மிக​வும் அதிரடி​யாக விளை​யாடி வரு​கிறோம். கடந்த சில ஆண்​டு​களாக பல அணி​களின் இயல்பு இது​தான்.

Read Entire Article