ARTICLE AD BOX

சென்னை: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 9-வது சீசன் வரும் ஜூலையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதான வளாகத்தில் நடைபெற்றது. இந்த ஏலத்துக்காக 691 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். இதில் இருந்து தொடரில் கலந்து கொள்ளும் 8 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தனர். அதிகபட்சமாக ஆல்ரவுண்டர் எம்.முகமதுவை சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி ரூ.18.40 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.
மேலும் அந்த அணி ஆல்ரவுண்டர்கள் ஹரி நிஷாந்த் (ரூ.12 லட்சம்), நித்திஷ் ராஜகோபால் (ரூ.10 லட்சம்), பேட்ஸ்மேன் பூபதி வைஷ்ண குமார் (ரூ.6.80 லட்சம்), பந்து வீச்சாளர் அஜித் ராம் (ரூ.5 லட்சம்), விக்கெட் கீப்பர்கள் ஈஸ்வர் (ரூ.4 லட்சம்), கவின் (ரூ.2.20 லட்சம்), பந்து வீச்சாளர் ரகில் சஞ்ஜய் ஷா (ரூ.லட்சம்) ஆகியோரையும் ஏலம் எடுத்தது.

10 months ago
9







English (US) ·