ARTICLE AD BOX

டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக மிரட்டி, முதியவரிடம் சேமிப்பு பணம் ரூ.44 லட்சத்தை மோசடி செய்த வழக்கில் வங்கி துணை மேலாளர் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் பட்டாபி (83). இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த செப்.1-ம் தேதி ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தனது பெயர் சங்கர், மும்பை குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் என்று அறிமுகம் செய்து கொண்டார். தொடர்ந்து, ‘நீங்கள் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டு, வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளீர்கள். எனவே, உங்களை கைது செய்ய போதிய ஆதாரங்கள் இருக்கிறது’ என்று கூறி, பட்டாபியை மிரட்டி உள்ளார்.

2 months ago
4







English (US) ·