டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.50 லட்சத்தை இழந்த வயதான தம்பதி தற்கொலை

9 months ago 8
ARTICLE AD BOX

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள பெலகாவி அருகே டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.50 லட்சத்தை இழந்த வயதான கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கானாப்பூரை அடுத்துள்ள பீடி கிராமத்தை சேர்ந்தவர் டியோக்ஜெரோன் சந்தன் நாசரேத் (82). மகாராஷ்டிர அரசு தலைமை செயலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தன‌து மனைவி ஃபிளேவியானாவுடன் (80) அங்கு வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லாத‌ நிலையில், கடந்த 27ம் தேதி இருவரும் வீட்டில் சடலமாக கிடந்தனர்.

Read Entire Article