டெலிவரி பாய் போல் நோட்டமிட்டு தொடர் திருட்டு: உ.பி கொள்ளையர்கள் சென்னையில் கைது

2 months ago 4
ARTICLE AD BOX

சென்னை: டெலிவரி பாய் போல் நோட்டமிட்டு பூட்டி இருக்கும் வீடுகளை குறி வைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட உ.பி கொள்ளையர்கள் இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டை, புஜங்காரா வீதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அதில், 2-வது தளத்தில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 8ம் தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு மாலை வீடு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியுடன் உள்ளே சென்றபோது பீரோவில் இருந்த 32 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

Read Entire Article