டெல்லி சைபர் க்ரைம் போலீஸ் என மிரட்டி கடை உரிமையாளரிடம் ரூ.16.50 லட்சம் பறிப்பு: ஒருவர் கைது

7 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: டெல்லி சைபர் க்ரைம் போலீஸ் எனக் கூறி கடை உரிமையாளரை டிஜிட்டல் கைது செய்து ரூ.16.50 லட்சம் பறித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி கும்பலைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை கொளத்தூர், விவேகானந்தன் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ராஜ்குமார்(37). ஆட்டொமொபைல் கடை நடத்தி வருகிறார். கடந்த 16-ம் தேதி இவருக்கு போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர் ‘நாங்கள் டெல்லி சைபர் கிரைம் தலைமையகத்திலிருந்து பேசுகிறோம். உங்கள் மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆபாச வீடியோக்களை பகிர்ந்தது தொடர்பாக புகார் வந்துள்ளது. எனவே, நீங்கள் உடனடியாக டெல்லியில் ஆஜராக வேண்டும்.

Read Entire Article