தடுமாறிய சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள்: 103 ரன்களில் சுருட்டிய கொல்கத்தா | CSK vs KKR

8 months ago 9
ARTICLE AD BOX

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் 25-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி வீரர்கள் ரன் சேர்க்க தடுமாறினர். 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது அந்த அணி.

சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச முடிவு செய்தது. கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இன்னிங்ஸை ஓபன் செய்தனர். காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் இந்த சீசனில் இருந்து விலகி உள்ளார். அதனால் அணியை தோனி வழிநடத்துகிறார். சிறப்பான தொடக்கத்தை சிஎஸ்கே ஓப்பனர்கள் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு 4-வது ஓவரில் தவிடு பொடியானது. கான்வே, 12 ரன்கள் எடுத்து எல்பிடபிள்யூ முறையில் மொயின் அலி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் நான்கே ரன்களில் ரச்சின் வெளியேறினார். அவரை ராணா அவுட் செய்தார்.

Read Entire Article