தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் திட்டியதால் அரியலூரில் டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை

7 months ago 8
ARTICLE AD BOX

அரியலூர்: தனி​யார் நிதி நிறுவன ஊழியர்​கள் திட்​டிய​தால் டிராவல்ஸ் உரிமை​யாளர் தற்​கொலை செய்​து​ கொண்​டது தொடர்​பாக போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். அரியலூர் மாவட்​டம் உடை​யார்​பாளை​யத்தை அடுத்த தத்​தனூர் நடு​வெளி கிராமத்​தைச் சேர்ந்​தவர் ந.மணி​கண்​டன்​(33). டிராவல்ஸ் நிறு​வனம் நடத்தி வந்​தார். இவருக்கு மனை​வி, இரு குழந்​தைகள் உள்​ளனர். கடந்த ஆண்டு அரியலூரில் உள்ள தனி​யார் நிதி நிறு​வனத்​தில் மணி​கண்​டன் ரூ.12 லட்​சம் கடன் பெற்​றுள்​ளார்.

மாதந்​தோறும் தவணைத் தொகை கட்டி வந்த நிலை​யில், கடந்த 3 மாதங்​களாக தவணைத் தொகையை கட்​ட​வில்லை என்று தெரி​கிறது. இதனால், மணி​கண்​டன் வீட்​டுக்கு வந்த நிதி நிறுவன ஊழியர்​கள் இரு​வர், பணத்தை செலுத்​து​மாறு கட்​டாயப்​படுத்​தி, தகாத வார்த்​தைகளால் திட்​டி​னார்​களாம். இதனால் மனமுடைந்த நிலை​யில் இருந்த மணி​கண்​டன் கடந்த 25-ம் தேதி விஷம் அருந்தி தற்​கொலைக்கு முயன்​றார்.

Read Entire Article