ARTICLE AD BOX

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே தன்பாலின உறவுக்கு இடையூறாக இருந்த 5 மாத ஆண் குழந்தையைக் கொன்ற தாய் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஓசூர் அருகே கெலமங்கலத்தை அடுத்த சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுரேஷ் (38). இவரது மனைவி பாரதி (26). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இரு பெண் குழந்தைகளும், துருவன் என்ற 5 மாத கைக் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில், கடந்த 4-ம் தேதி துருவன் பால் குடிக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியதாக, அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

1 month ago
3







English (US) ·