தமிழக போலீஸின் ‘ஆபரேஷன் ஹைட்ரா’ - வட மாநிலங்களை சேர்ந்த 7 பேர் சிக்கியது எப்படி?

7 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: ‘ஆபரேஷன் ஹைட்ரா’ என்ற சிறப்பு நடவடிக்கை மூலம் ஜார்க்கண்ட், அசாம், டெல்லியைச் சேர்ந்த 7 பேர் கும்பலை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருமண தள மோசடி, போலீஸ் அதிகாரிகள் போல் மிரட்டி பணம் பறித்து மோசடி, வங்கி விபரங்களை திருடி மோசடி என பல்வேறு வகையான சைபர் க்ரைம் மோசடிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதில், தொடர்புடையவர்களை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்து வரும் நிலையில், மோசடிக்கு மூளையாக செயல்படுவர்கள் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய தமிழக சைபர் க்ரைம் போலீஸார் ‘ஆபரேஷன் ஹைட்ரா’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

Read Entire Article