ARTICLE AD BOX

தமிழகத்தில் போதை மருந்துகளின் பயன்பாட்டை கண்காணிக்கும் வகையில் சுமார் 41 பறக்கும் படைகள், மருந்து ஆய்வாளர்களை கொண்டு அமைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் சின்தடிக் என்ற வேதி போதை மருந்து, போதை மாத்திரைகளின் பயன்பாடு மற்றும் கடத்தல் ஆகியவற்றின் பயன்பாட்டை கண்காணிக்கவும், பறிமுதல் செய்யவும் தமிழக அரசு மற்றும் காவல் துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய 2 இடங்களில் மட்டும் தமிழ்நாடு மருந்துகள் கட்டுப்பாட்டு துறை மூலம் பறக்கும் படை உள்ளது. இந்த பறக்கும் படையினரே மாநிலம் முழுவதும் போதை மருந்துகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் மாவட்ட வாரியாக சென்று கண்காணிப்பது பெரும் சவாலாக இருந்து வந்தது.

7 months ago
8







English (US) ·