ARTICLE AD BOX

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஏமனூர் வனப்பகுதியில் தந்தத்துக்காக யானையை வேட்டையாடி பிடிபட்டு தப்பியோடிய நபர் இன்று (5-ம் தேதி) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வனச்சரகம் ஏமனூர் காப்புக்காடு கோடுபாவி பகுதியில் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி மர்ம நபர்களால் ஆண் யானை ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டு தந்தங்கள் வெட்டியெடுக்கப்பட்ட பின்னர் யானையின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து , கடந்த மார்ச் 1-ம் தேதி தகவல் அறிந்த வனத்துறையினர் 5 தனிப்படைகள் அமைத்து யானை வேட்டை கும்பலை தேடி வந்தனர்.

8 months ago
8







English (US) ·