ARTICLE AD BOX

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தை காண தலைப்பாகை, ஆர்சிபி ஜெர்ஸி அணிந்து வந்துள்ளார் கிறிஸ் கெயில். அவர் எந்த அணிக்கு ஆதரவு அளிக்கிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்த ஆர்சிபி அணி, முதலில் பேட் செய்து வருகிறது. இந்த ஆட்டத்தை நேரில் காண நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்துக்கு ரசிகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என பலரும் வந்துள்ளனர். இதில் ஆர்சிபி அணிக்காக நீண்ட காலம் ஆடிய கிறிஸ் கெயில் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் வந்துள்ளனர். இதில் ஆர்சிபி அணியை ஆதரிப்பதாக டிவில்லியர்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

6 months ago
8







English (US) ·