தலைமைக் காவலரை கொல்ல முயன்ற வழக்கில் 2 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை

8 months ago 8
ARTICLE AD BOX

ஓசூர்: தளியில் ஏட்டை கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேருக்கு 12 ஆண்டுகள் தண்டனை வழங்கி தேன்கனிக்கோட்டை சார்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், சோதனைச் சாவடியில் பணியில் இருக்கும் காவலர்களுக்கு ஆயுதம் வழங்க டிஜிபி மற்றும் தலைமைச் செயலருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் மாரியப்பன் (55). இவர் கடந்த 2015-ம் ஆண்டு அக்.20-ம் தேதி தமிழக- கர்நாடக மாநில எல்லையில் உள்ள கும்மளாபுரம் சோதனைச் சாவடியில் பணியில் இருந்தார். அப்போது, அவ்வழியாகக் கர்நாடக மாநிலம் ஆனைக்கல் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (37), தளி உமேஷ் (33), பெங்களூரு ஒசரோடு மது (33), ஆகியோர் போதையில் வந்தனர்.

Read Entire Article