ARTICLE AD BOX

தாம்பரம்: தாம்பரத்தை அடுத்த குறிஞ்சி நகர், வி.ஜி.என். குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு காலி இடத்தில் தலை, முகம், கைகளில் பலத்த வெட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தாம்பரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர்.
இளைஞரின் உடலை மீட்டு தாம்பரத்தில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அருகே நின்றிருந்த ஆட்டோவை சோதனை செய்ததில் அதில் ரத்தக்கரை இருந்தது தெரிந்தது. தொடர் விசாரணையில் கொலை செய்யப்பட்ட இளைஞர், குரோம்பேட்டை, துர்கா நகரை சேர்ந்த வினோத்குமார் என்கிற ஆத்தா வினோத் (28) என்பது தெரியவந்தது.

3 months ago
4







English (US) ·