ARTICLE AD BOX

கிழக்கு தாம்பரம் சேலையூரில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை கூலி தொழிலாளிகளை குறிவைத்து அமோகமாக நடைபெறுகிறது. இதைத் தட்டி கேட்டால் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேற்றப்படுகிறது. தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளால் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு பலர் தற்கொலை வரை சென்றதால் லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது.
ஆனால் கிழக்கு தாம்பரம் சேலையூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிழக்கு தாம்பரம், காந்தி நகர் பூங்கா, சேலையூர், காமராஜபுரம் பேருந்து நிறுத்தம், வேங்கைவாசல், சேலையூர், மாடம்பாக்கம் காவல் நிலையம் பின்புறம் என பல்வேறு பகுதிகளில் லாட்டரி கும்பல் ரகசியமாக, திறந்தவெளியில் விற்பனை செய்து வருகிறது.

9 months ago
9







English (US) ·