ARTICLE AD BOX

தாம்பரம்: தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் ஏரியில் மிதந்த சேலையூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களின் சடலங்களை மீட்ட போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பெரியார் தெரு பின்புறம் உள்ள சிட்லப்பாக்கம் ஏரியில் அடையாளம் தெரியாத இரண்டு சிறுவர்கள் சடலமாக மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற சிட்லபாக்கம் போலீஸார், தீயணைப்பு வீரர்களின் உதவியோடு சிறுவர்களின் உடல்களை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

3 months ago
5







English (US) ·