ARTICLE AD BOX

மதுரை: தாய், மகள் அளித்த பாலியல் புகாரை முறையாக விசாரிக்காமல் முடித்து வைத்தது தொடர்பாக காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராக விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசியைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவரிடம் சுரண்டையை சேர்ந்த பெண் தனது மகனின் மருத்துவ சிகிச்சைக்காக கடன் பெற்றுள்ளார். அந்த கடனை திரும்ப செலுத்தாத நிலையில் அந்தப் பெண்ணுக்கும், அவரது மகளுக்கும் பாலியல் தொந்தரவு அளித்ததாக நீலகண்டன் மீது ஆலங்குளம் காவல் நிலையத்தில் 2 புகார்கள் அளிக்கப்பட்டன. இப்புகாரின் பேரில் நீலகண்டன் மீது போலீஸார் 2 வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நீலகண்டன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.

4 months ago
6







English (US) ·